குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பயிற்சி

ஊட்டி, ஜூன் 21: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.  மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள 6491 பணியிடங்களை நிரப்பும் பொருட்டு குரூப்4 எழுத்து தேர்விற்கு விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவித்துள்ளது. இதற்கான கல்வி தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வயது தளர்வு உண்டு.  என்ற இணையதளம் வழியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் அடுத்த மாதம் 14ம் தேதியாகும். போட்டி தேர்வுகளை எழுதி தமிழ்நாடு அரசு வேலை பெற இது அரிய வாய்ப்பாகும். இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஊட்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. எனவே இத்தேர்வுகளுக்கு விண்ணப்பம் செய்தவர்கள் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பயிற்சி வகுப்பில் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0423-2223346 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு  இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

Related Stories: