திருவையாறு, ஜூன் 21: திருவையாறு உதவி வேளாண்மை இயக்குனர் சரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவையாறு வட்டார வேளாண்மைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம் குறித்து சுற்றுவட்டார கிராமங்களில் முனைப்பு இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக நமது பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் வறட்சி ஏற்பட்டு நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துள்ளது. விவசாயிகள் சாகுபடிக்கு தயாராக உள்ள நிலையில் குறைந்த நீரில் நிறைந்த வருவாய் ஈட்ட நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் பயன்பெறலாம்.