வாலாஜாபாத், ஜூன் 21: தினகரன் செய்தி எதிரொலியாக, நடுநிலைப்பற்றி சுற்றுச்சுவர் அருகே இருந்த குப்பைகளை, துப்புரவு ஊழியர்கள் அகற்றினர். வாலாஜாபாத் ஒன்றியம் முத்தியால்பேட்டை ஊராட்சியில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெருக்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு வந்து, இங்குள்ள நடுநிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் அருகில்தொட்டியில் கொட்டி எரிக்கின்றனர்.இதனால், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மேலும், இவ்வழியாக செல்லும் கிராம மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைகின்றனர்.