ராமநாதபுரம், ஜூன் 19: ராமநாதபுரம் மாவட்ட அனைத்து ஓய்வூதியர் மற்றும் மூத்த குடிமக்கள் நல உரிமைச் சங்கத்தின் 26வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் ஜனார்த்தன மாளிகையில் நடந்த கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சங்க மாவட்டப் பொருளாளர் சுவாமிநாதன் ஆண்டறிக்கையை வாசித்தார். இணைச்செயலாளர் பெர்னார்ட் ஆரோக்கியசாமி தீர்மானங்களை வாசித்தார். மாதத்தின் இடையே ஓய்வூதியர் மரணமடையும் நிலையில், அவர்களுக்கான அந்த மாத ஓய்வூதியத்தை வழங்கவும், அடுத்தமாதம் முதலே அவர்களுக்கான குடும்ப ஓய்வூதியத்தை வழங்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், சங்கத்தின் துணைத் தலைவர் பதவி உள்ளிட்டவற்றுக்கான கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட துணை கருவூல அலுவலர் தியாகராஜன், ராமநாதபுரம் மாவட்ட பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் எம்.கே.செந்தில்நாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். துணைத் தலைவர் இ.முத்துகிருஷ்ணன் வரவேற்றார். நிர்வாகி பாலகிருஷ்ணன் நன்றி கூறினார். கீழக்கரை, ஜூன் 19:ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கிழக்கு மாவட்ட பொருளாளர் முகம்மது ரபீக் இல்லத்திருமணம் விழா நடைபெற்றது, இதில் எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முகம்மது முபாரக் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.