பழநி, ஜூன் 19: பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஹோட்டல் கண்பத் கிராண்ட் நிறுவனம் சார்பில் அன்னாபிஷேக விழா நடந்தது. பழநி கிழக்கு ரத வீதியில் அமைந்துள்ளது பெரியநாயகி அம்மன் கோயில். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயிலில் நேற்று மாலை சாயரட்சை பூஜையின் போது உலக நலன், உலக அமைதி, நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி அன்னாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் உள்ள கலசங்களை வைத்து சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து விக்னேஸ்வர் பூஜை, புண்யாவஜ்னம், சங்கு பூஜை, கலச பூஜை, ஹோமம், பூர்ணாகுதி ஆகிய பூஜைகள் செய்யப்பட்டு கலசம் கோயிலின் உட்பிரகாரத்தை சுற்றி வரும் நிகழ்ச்சி நடந்தது.