கும்பகோணம், ஜூன் 19: கும்பகோணம் அடுத்த மேலக்காட்டூர் ஊராட்சியில் 10 ஏக்கரில் பிள்ளையார் கோயிலுக்கு சொந்தமான குளம் உள்ளது. இக்குளத்தில் கோயில் தெப்பம் விடுவதற்காக கோயில் நிர்வாகிகள், குளத்திலுள்ள மண்ணை கடந்த 10 நாட்களுக்கு மேலாக எடுத்து வருகின்றனர்.இந்நிலையில் குளத்தில் உள்ள மண்ணை எடுத்ததாலும், குளத்தில் அனுமதிக்கப்பட்ட ஆழத்தைவிட அதிகமாக தோண்டிய மண் அள்ளியதால் போலீசார், வருவாய்த்துறையிடம் அப்பகுதி மக்கள் தெரிவிததனர். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மேலக்காட்டூரை சேர்ந்த பொதுமக்கள், குளத்தில் மண் அள்ளி செல்லும் டிராக்டர் வாகனத்தை மறித்தனர். இதனால் மண் எடுப்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.