தஞ்சை, ஜூன் 19: தஞ்சை மாவட்டத்தில் வேளாண் மக்கள் தங்களது உழவு பணிகளை செம்மையுற செயல்படுத்தும் விதமாக தஞ்சை மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் 243 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக வட்டியில்லா பயிர்க்கடனாக 2018-19ம் ஆண்டில் ரூ.252 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.254 கோடி என இலக்கை தாண்டி விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டது.இந்தாண்டு 2019-20க்கு ரூ.311 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.