பெரம்பலூர்,ஜூன்18: பெர ம்பலூரில் மாவட்ட அளவி லான உலக இசை தின விழா நுண்கலைப் போட்டிகள். இன்று (18ம்தேதி) நடக்கிறது. இது குறித்து பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியின் தலை மை ஆசிரியர் ஹேமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்ப தாவது : பெரம்பலூரில் உலக இசை தினவிழா நுண் கலைப் போட்டிகள், மாவட்ட அரசு இசைப் பள்ளி சார்பில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று (புதன் கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி நடக்கிறது.இதில் தமிழிசைப் போட்டி, கிராமிய பாடல் போட்டி, முதன்மைக் கருவி இசை போட்டிகளான நாதஸ்வ ரம், வீணை, வயலின், புல்லாங்குழல், கோட்டு வாத்தி யம், மாண்டலின் , சாக்ஸ போன், கிளாரி நெட் போன் றவற்றை இசைக்கலாம்.