பெரம்பலூர்,ஜூன்19: பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 1,09,382பேர் 108 ஆம்புலன்ஸ் சேவைகளைப் பெற் றுள்ளனர். என கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்ட மேலாளர் தெரிவித்தார்.பெரம்பலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவ மனையில் 108 ஆம்பு லன்ஸ் எனப்படும் அவசர ஊர்தி சேவை ஊழி யர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத் திற்கு, மாவட்ட மேலாளர் உதயநிதி தலைமை வகித்து பேசியதாவது :பெரம்பலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை கடந்த 2008ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 13 ஆம்புலன்சு கள் இயங்கி வருகின்றன. இதில் கடந்த ஏப்ரல் மாதம் வரை மொத்தம் ஒரு லட்சத்து, 9 ஆயிரத்து, 382பேர் வரை ஆம்புலன்ஸ் சேவைகளைப் பயன்படுத்தியுள்ளனர். இதில் பிரசவத்திற்காக தாய்மார்கள் 24 ஆயிரத்து, 319 பேரும், சாலை விபத்தில் சிக்கி யவர்கள் 19 ஆயிரத்து, 300 பேரும், பிற பல்வேறு அவசர மருத்துவத் தேவைகளுக்காக 65ஆயிரத்து, 763 பேரும் இந்த சேவைகளைப் பய ன்படுத்தியுள்ளனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கடந்த 11ஆண்டுகளில் பல்லா யிரக்கணக்கான விலை மதிப்பற்ற உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த சேவைகள் முற்றிலும் இலவச சேவை என்பதால், பொது மக்களுக் குப் பெரிதும் உதவி கரமாக இருந்து வருகிறது.