பெரம்பலூர்,ஜூன்19: பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தில்
முதன் முறையாக, மாவட்டம் முழுமை க்கும் மின்ஆளுமைத்திட்டம் அமல்ப டுத்தப்பட்டது. இதனையொட்டி தமிழ கத்தில் முன்னோடியாக பெரம்பலூர் மாவட்டத்தில் பரீட்சார்த்தமாக பள்ளி ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் எனப்படும் தொடுஉணர் வருகைப்பதி வேடு முறையும் அறிமுகப்படுத்தப்ப ட்டது. இது ஆன்லைன் குளறுபடி, பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்குக்கூட கையாளத் தெரியாததுபோன்ற கார ணங்களால் முழுமையாக வெற்றி பெறாமல் இருந்தபோதும், மாவட்ட அளவில் 50 பள்ளிகளில் பரிச்சார்த்த மாக நடை முறைப்படுத்தப்பட்டது. இதனையடுத்து ஆஃப்லைன் மூலம் பள்ளி மாணவர்களுக்கான பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறையும் பரீட்சார்த்தமாக இந்த மாவட்டத்தில் தான் நடைமுறை படுத்தப்பட்டது.இதற்காக பள்ளிக்கல்வித் துறை சார்பாக வழங்கப்பட்ட சாப்ட்வேர் டிவைஸ் மூலம் பயோமெட்ரிக் வரு கைப்பதிவேடு முறை குறிப்பிட்ட சில பள்ளிகளில் மட்டும் நடைமுறையில் இருந்துவந்தது. இந்நிலையில் பெரம் பலூர் மாவட்டத்தில் பரீட்சார்த்தமாக பள்ளி ஆசிரியர்களுக்கு தொடங்கப் பட்ட பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை, தற்போது தமிழகஅளவில் நடப்பு கல்வியாண்டில் ஜூன் 3ம்தேதி முதல் நடைமுறைப்படுத்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இதன்படி ஆன்லைன்மூலம் ஆசிரிய ரின் வருகைப்பதிவை ஆதார்எண்கள் உதவியுடன் பதிவுசெய்யும்முறை நடைமுறைக்கு வந்துள்ளது.