செய்யூர், ஜூன் 19: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கூவத்தூரில் நேற்று முன்தினம் நடந்தது.இலத்தூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர், ஆர்.டி.அரசு எம்எல்ஏ ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். தலைமை கழக பேச்சாளர் ஈரோடு இறைவன் சிறப்புரையாற்றினார்.