தூத்துக்குடி புறநகரில் இன்று மின்தடை

தூத்துக்குடி, ஜூன் 19: தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் இன்று  (19ம்தேதி) மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து தூத்துக்குடி நகர மின்விநியோக செயற் பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி அருகே அய்யனார்புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (19ம் தேதி) நடக்கிறது. இதனால் மாப்பிள்ளையூரணி, தாளமுத்து நகர், சிலுவைப் பட்டி கிருஷ்ணராஜ  புரம், முத்துகிருஷ்ணாபுரம், திரேஸ்புரம், பூபால்ராய புரம், லூர்தம்மாள்  புரம், அலங்கார தட்டு, மேலஅரசடி கீழஅரசடி, வெள்ளபட்டி, தருவை குளம், பட்டினமருதூர், மேல மருதூர், பனையூர், வாலசமுத்திரம், ஏ குமாரபுரம் ஆகிய  பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: