வேலூர், ஜூன் 19: வேலூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் விதிமீறிய வாகன ஓட்டிகள் 5,610 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாவட்டந்தோறும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல் வேலூர் மாவட்டத்திலும் தேசிய நெடுஞ்சாலைகளில் இரும்பு தடுப்புகள், ஒளிரும் மின்விளக்குகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சாலை பாதுகாப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.இருப்பினும் சாலை விபத்துக்கள் தொடர்ந்து வருகிறது. எனவே சாலை விதிகளை பின்பற்றாது விதிமீறும் வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் கடந்த 6 மாதங்களாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.