ஊட்டி, ஜூன் 19: அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் புதிதாக உறுப்பினர்களை சேர்க்க சிறப்பு பதிவு முகாம் 20ம் தேதி (நாளை) பந்தலூர் வட்டாம், அய்யன் கொல்லி கிராமத்தில் நடக்கிறது. இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் லெனின் கூறியிருப்பதாவது: கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர், அமைப்புசாரா ஓட்டுநர்கள், சலவை தொழிலாளர், முடி திருத்துவோர், தையல் தொழிலாளர்கள், கைவினை தொழிலாளர், காலணி தயாரிக்கும் தொழிலாளர், ஓவியர், பொற்கொல்லர், மண்பாண்ட தொழிலாளர், வீட்டுப்பணியாளர், பாதையோர வணிகர்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர், சமையல் தொழிலாளர் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கொன 17 நல வாரியங்கள் அரசால் ஏற்படுத்தப்பட்டு தொழிலாளர் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாரியங்களில் தொழிலாளர் பதிவு துறையின் சேர்க்கை மாவட்ட தொழிலாளர் அலுவலகத்தில் நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் இந்த நல வாரியங்களில் புதிதாக உறுப்பினர்களை சேர்க்க சிறப்பு பதிவு முகாம் நடக்கவுள்ளது.