நெய்வேலி, ஜூன் 19: வடக்குத்து ஊராட்சி நகர் பகுதியில் தொடரும் மின்வெட்டால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நெய்வேலி வடக்குத்து ஊராட்சியில் பி.டி.ஆர் நகர், எஸ்.பி.டி மணி நகர், சக்தி நகர், தில்லை நகர், அசோக் நகர் உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதிகளில் ஓய்வு பெற்ற என்.எல்.சி ஊழியர்கள், சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வசிது வருகின்றனர். தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் மேற்கண்ட பகுதிகளில் சமீபகாலமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. தினமும் குறைந்தது நான்கு முறையாவது மின்வெட்டு தடைபடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது வெயில் காலம் என்பதால் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலானவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.