திருச்சி, ஜூன் 18: திருச்சி மத்திய சிறையில் நேற்று விசாரணைக்கு சென்ற கைதிகளை மீண்டும் சிறையிலடைப்பதில் ஏற்பட்ட காலதாமதத்திதால் மத்திய சிறைச்சாலை முன் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சி மத்திய சிறையில் 1,450க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.இதில், சிறையில் கைதிகள் அனைவரும் காலை 7 மணிக்கு சிறைவாசல் திறக்கப்பட்டு மீண்டும் மாலை 5 மணிக்கு சிறைக்குள் அடைக்கப்படுவது வழக்கம். மாலையில் சிறை கைதிகள் எந்த சிறை அறையில் எந்தெந்த கைதி அடைக்கப்பட வேண்டும் என பட்டியலில் பெயர் படித்து அதன் படி கைதிகள் அடைக்கப்படுவது வழக்கம். இதற்காக அனைவரும் மாலை ஒன்றாக கூடி ரோல்கால்கிற்கு அணிவகுத்து நிற்க வேண்டும்.இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணிையை கடந்தும் வெளியே சென்ற சிறை காவல் நீட்டிப்பு கைதிகளை அடைக்க சிறை அதிகாரிகள் முன்வரவில்லை. இதனால் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் கைதிகள் சிறை மெயின் கதவிற்கு அருகே காத்திருந்திருந்தனர். இதில் ஒரு சில கைதிகள் தப்பியோடும் சூழலில் இருந்ததால் உடன் பாதுகாப்பிற்கு சென்ற போலீசாருக்கு இக்கட்டான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து ஒரு வழியாக இரவு 7 மணிக்கு மேல் நீதிமன்ற காவல் நீட்டிப்பிற்கு சென்ற கைதிகள் கணக்கெடுப்பிற்கு பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.