சேந்தமங்கலம், ஜூன் 18: ெகால்லிமலை அரசு பண்ணை சார்பில், பழச்செடிகள் விற்பனை செய்யப்படுகிறது. கொல்லிமலையில் செம்மேடு, படசோலையில் அரசு தோட்டக்கலை பண்ணைகள் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் நடவுச்செடிகள் மற்றும் பண்ணையில் சாகுபடி செய்யப்படும் விளைபொருள்களை விற்பனை செய்வதற்கான, தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் சில்லரை விற்பனை நிலையம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தோட்டக்கலை தொழில்நுட்ப ஆதார மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.