தொண்டி, ஜூன் 14: பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் பெண் குழந்தைகள் மீது பெற்றோர்கள் கல்வி மற்றும் ஒழுக்கம் குறித்து தனி கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நவீன கால வளர்ச்சிக்கு ஏற்ப செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. கல்வியின் வளர்ச்சியை விட ஒழுங்கீனமான செயல்களுக்கே அதிகளவில் செல்போன் பயன்படுத்தப்படுகிறது. இது பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கி விடுகிறது. மாணவர்கள் பள்ளி செல்லும் போது அவர்களின் செயல்பாடுகள் முழுவதையும் கண்காணிக்க வேண்டும். நண்பர்களுடன் செல்லும் இடங்கள் குறித்தும் அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.