புதுகையில் நடந்த திருமண விழா மகாராஷ்டிரா முதல்வர் பங்கேற்பு

புதுக்கோட்டை, ஜூன் 14: புதுகையில் நடந்த திருமண விழாவில் மகாராஷ்டிரா முதல்வர் பங்கேற்றார்.

புதுக்கோட்டையில் நடந்த திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திரபட்னாவிஸ் விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். பின்னர் திருச்சியில் இருந்து காரில் புதுக்கோட்டையில் நடந்த திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பரிசு வழங்கிவிட்டு, காரில் திருச்சிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் மகாராஷ்டிராவிற்கு புறப்பட்டு சென்றார். இந்த திருமண விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.இந்த திருமண விழாவில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, அதிமுகவில் நிலவும் பிரச்னை அவர்களது கட்சிக்குள் உள்ள பிரச்னை. அமைச்சர் சி.வி சண்முகம் பாஜக கூட்டணி குறித்து கூறியது அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. இதனால் அதை பெரிதுபடுத்த விரும்பவில்லை. அபிநந்தன் பற்றி பாகிஸ்தானில் உள்ள ஒரு ஊடகம் செய்தி வெளியிட்டது கடும் கண்டனத்துக்குரியது என்றார்.

Related Stories: