கோவை அருகே கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை

கோவை, ஜூன்13: கோவை அருகே குடிபோதையில் வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கோவை அடுத்த அன்னூர் குரும்பபாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் கணேசன்(21). திருமணமாகவில்லை. குடிபழக்கத்திற்கு அடிமையான இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் இருந்த கணேசன் அந்த பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: