திருவாடானை, ஜூன் 12: திருவாடானை அருகே பாரதி நகரில் கழிவுநீர் கால்வாய் இல்லாமல் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவாடானை ஊராட்சி ஒன்றியம் கல்லூரி ஊராட்சியைச் சேர்ந்தது பாரதி நகர். இது கல்லூர் ஊராட்சியை சேர்ந்தது என்றாலும் திருவாடானையை ஒட்டி அமைந்துள்ளதால், இங்கு அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரும்பாலானோர் இங்குதான் குடியிருந்து வருகின்றனர். இதனால் இது வளர்ந்து வரும் பகுதியாக மாறி விட்டது. இங்கு வரிசை வரிசையாக வீதிகள் இருந்தும் மழைநீர் மற்றும் சாக்கடை கழிவுநீர் வெளியேற கால்வாய்கள் கட்டப்படவில்லை.