ராமநாதபுரம், ஜூன் 12: ராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் இசிஆர் சாலையில், பேராவூர் கிழக்கு பகுதியை சேர்ந்த முனியசாமி மகன் வினோத்(28) டூவீலரில் சென்றார். பேராவூர் கண்மாய் வளைவு அருகே சென்றபோது டூவீலர் டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்ைட இழந்த டூவீலர் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே வினோத் உயிரிழந்தார்.