தொண்டி, ஜூன் 12: கடந்த ஒரு வாரமாக கடுமையான காற்று வீசுவதால் கடலில் சீற்றம் காணப்படுவதாகவும், அதனால் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல அச்சமாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இதனால் மீன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது மீன்பிடி தடை காலம் அமலில் இருப்பதால் விசை படகுகள் ஆழ்கடலுக்கு முன் பிடிக்க செல்லவில்லை. நாட்டு படகுகள் மட்டுமே கரை ஓரங்களில் மீன் பிடித்து வருகின்றனர். இதனால் மீன் வரத்து குறைவாக இருப்பதால் மீன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கடுமையான காற்று வீசுகிறது.
இது கடலில் அதிகமாக இருப்பதாகவும் படகில் செல்ல அச்சமாக இருப்பதால் கடந்த சில நாட்களாக நாட்டு படகு மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மேலும் மீன்வரத்து குறைந்து விட்டது. இதனால் விலையும் அதிகரித்துள்ளது. இது அசைவ பிரியர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புயல் அறிவிப்பால் சில நாட்கள் கடலக்கு செல்ல வில்லை.