விருதுநகர், ஜூன் 12: விருதுநகரில் உள்ள வெயிலுகந்தம்மன் கோயிலில், வைகாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று ஏராளமானோர் பொங்கல் வைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விருதுநகர் வெயிலுகந்தமன் கோயிலில், வைகாசி பொங்கல் திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினசரி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதியுலா வந்து பொதுமக்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைக்கும் விழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி, ஏராளமானோர் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.