திண்டுக்கல்லில் ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க கூட்டம்

திண்டுக்கல், ஜூன் 12:திண்டுக்கல்லில் ஓய்வு பெற்ற காவலர்கள் நலச்சங்க கூட்டம் நடந்தது. இதில் தேர்தல் பணியாற்றிய சங்க உறுப்பினர்களை அழைத்து எஸ்.பி., சக்திவேல் பாராட்டி நன்றி தெரிவித்தது மட்டுமல்லாமல், அவர்களை கவுரவபடுத்தியதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளுக்கு நல வாரியம் அமைக்க உத்தரவிட்டதற்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சங்கத்தில் இணையாத ஓய்வு பெற்ற காவலர்கள், இதில் இணைவதற்கு செல் 9443302257, 7010563067ல் தொடர்பு கொள்ளலாம். இதில் சங்க தலைவர் ஜியாகுல்அமீது, வெங்கிடுசாமி, செயல் தலைவர் நடராஜமூர்த்தி, கவுரவ தலைவர் சுகுமாறன், பொருளாளர் கிருஷ்ணசாமி மற்றும் அங்குச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: