பெரம்பலூர், ஜூன் 12: பெரம்பலூரில், லாரி மீது கார் மோதிய விபத்தில் முதியவர் இறந்தார். 3 பேர் காயமடைந்தனர். பொள்ளாச்சியிலிருந்து சென்னை நோக்கி நேற்று முன்தினம் இரவு கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்புப் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் வந்தபோது, அவ்வழியே சென்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சென்னை ஆலம்பாக்கத்தைச் சேர்ந்த கண்ணன் (63), இவரது உறவினர்களான கிருஷ்ணன் (65), இவரது மகன் காரை ஓட்டிவந்த முரளிதரன் (30), வேல்விழி (47) ஆகிய 4 பேரும் காயமடைந்தனர். தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, காயமடைந்த நபர்களை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.