கும்பகோணம், ஜூன் 12: இந்து மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் லோகசெல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 5ம் தேதி திருப்பனந்தாளில் நடந்த கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் பேசும்போது, ராஜராஜசோழன் காலம் தான் பொற்காலம் என்பார்கள். ஆனால் ராஜராஜசோழன் ஆண்ட காலம் தான் இருண்ட காலம். ராஜராஜசோழன் என்னுடயை ஜாதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மிகப்பெரிய சூழ்ச்சியின் அடிப்படையில் எங்களது நிலம் பறிக்கப்பட்டது. டெல்டா பகுதியிலுள்ள எங்களுடைய நிலம் பறிக்கப்பட்டது ராஜராஜசோழன் ஆட்சி காலத்தில் தான். ஜாதிரீதியாக மிகப்பெரிய ஒடுக்கமுறை ஆரம்பிக்கப்பட்டது அந்த ஆட்சி காலத்தில் தான் என்று பேசியுள்ளார்.