சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்ததான முகாம்

தஞ்சாவூர்,மே12: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு ரத்த தானம் முகாம் நடந்தது. மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் துவக்கி வைத்தார். செவிலியர் கண்காணிப்பாளர்கள் ராஜேந்திரன், ஹேமலதா உட்பட செவிலியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் ரத்ததானம் அளித்தனர். முகாமில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராமசாமி நிலைய மருத்துவ அலுவலர் செல்வம், உதவி நிலைய மருத்துவ அலுவலர் முகமது இத்ரிஸ், டாக்டர் மாதேஷ், மஞ்சுளா தேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ரத்த வங்கி அலுவலர் டாக்டர் வேல்முருகன், டாக்டர் கிஷோர் குமார் மற்றும் ரத்த வங்கி செவிலியர்கள் செய்திருந்தனர்.

The post சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்ததான முகாம் appeared first on Dinakaran.

Related Stories: