தஞ்சாவூர் பெரியகோயிலில் குவிந்த மக்கள் பூதலூர் அருகே வொண்டர் வேர்ல்ட் தீம் பார்க் நடிகர் பிரபு திறந்து வைத்தார்

திருக்காட்டுப்பள்ளி,மே14: பூதலூர் அருகே வொண்டர் வேர்ல்ட் தீம் பார்க்கை நடிகர் பிரபு திறந்து வைத்தார். பூதலூர் அருகே திருச்சி மெயின் ரோட்டில் வொண்டர் வேர்ல்ட் தீம் பார்க் புதிதாக கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடந்தது .நிகழ்ச்சியில் நடிகர் பிரபுவின் மனைவி புனிதவதி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து நடிகர் பிரபு கல்வெட்டை திறந்தும், தீம்பார்க்கை திறந்து வைத்தும் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.கப்பலூர் ராமசாமி அம்பலம், கிருஷ்ணசாமி, தர் வாண்டையார், எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், நீலமேகம், மற்றும் தனசேகர வாண்டையார், விவசாய சங்க தலைவர் பி. ஆர். பாண்டியன், பூதலூர் சேர்மன் செல்லக்கண்ணு மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை குணசேகர வாண்டையார், இன்ஜினியர் விஜய் பிரகாஷ், டாக்டர் ரஞ்சித் குமார் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

The post தஞ்சாவூர் பெரியகோயிலில் குவிந்த மக்கள் பூதலூர் அருகே வொண்டர் வேர்ல்ட் தீம் பார்க் நடிகர் பிரபு திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: