ராமநாதபுரம், ஜூன் 11: ராமேஸ்வரம் பகுதியில் உள்ள தீவுகளில் பாரம்பரிய மீன் பிடித்தலை தடை செய்யக் கூடாது என மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ராமேஸ்வரம் பகுதியில் குருசடை தீவு உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட தீவுகளை சுற்றுலா தீவுகளாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தீவுகளை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து பாதுகாக்கும் வகையில் எல்லையை குறியிட்டு மிதவைப் பந்துகளும் மிதக்க விடப்பட்டுள்ளன. மிதவைப் பந்துகள் மிதக்க விட்டதால் தங்களது பாரம்பரிய தொழிலான மீன் பிடித்தலை தடை செய்ய வனத்துறை திட்டமிடுவதாக மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.