பரமக்குடி, ஜூள் 11: ஒரு பட்டு சேலைக்கு ரூ.500 வரை நஷ்டம் ஏற்பட்டு வருவதால், வாழ்வாதாரம் இழந்து வருவதாக கைத்தறி நெசவாளர்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் பட்டு நூல் விலை ஏற்றத்தால், கைத்தறி நெசவாளர்கள் பட்டு சேலை உற்பத்தியை குறைத்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் உற்பத்தியாகும் பட்டு சேலைகளின் எண்ணிக்கை கடுமையாக சரிந்துள்ளது. பரமக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் நெசவு தொழில் செய்து வருகின்றனர். குறிப்பாக பட்டு சேலைகள் உற்பத்தி செய்து பெரிய பெரிய ஜவுளி கடைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த முன்று மாதங்களாக பட்டு நூல் விலை ஏற்றத்தால் பட்டு சேலை உற்பத்தி கடுமையாக குறைந்துள்ளது. கச்சாபட்டு விலை, கடந்த 5 மாதங்களுக்கு முன் 3,300 ரூபாயாக இருந்தது. தற்போது 4500 ரூபாயாக அதிகரித்து விட்டது. அதோடு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால், விலை குறையாமல் உள்ளது. அதற்கேற்ப விலை உயர்த்தி விற்பனை செய்ய முடிய வில்லை.