குளச்சல், ஜூன் 7: மண்டைக்காடு அருகே அத்திமூடு பகுதியை சேர்ந்தவர் நேசமணி (60). கூலி தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் மாலை வேலை முடிந்து வீட்டுற்கு வெட்டுமடை சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மண்டைக்காடு புதூர் பிஆர்எஸ் காலனியை சேர்ந்த அனிஸ் முஸ்தபா (21) ஓட்டி வந்த பைக், நேசமணி மீது மோதியது. படுகாயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு குளச்சலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை நேசமணி இறந்தார்.