ராமநாதபுரம், ஜூன் 7: ராமநாதபுரம் அரசு போக்குவரத்து டவுன் பஸ் கிளையிலிருந்து தினமும் 52க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் ராமநாதபுரத்தை சுற்றி பல கிராமங்களுக்கு காலை முதல் இரவு வரை செல்கின்றன. நகர் பகுதியில் இயக்கப்படும் பல பேருந்துகள் கண்டமான நிலையில் உள்ளதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு நடுரோட்டில் நிற்பது வாடிக்கையாகி வருகிறது. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் பஸ் பழுதடைந்தால் காத்திருக்கும் அவல நிலை தொடர்கிறது. நேற்று காலை 7.30 மணிக்கு பழைய பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டு நத்தம் வரை செல்லும் 11ம் நம்பர் அரசு பஸ்சில் 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி புறப்பட்ட நிலையிலேயே ரேடியேட்டர் பழுதடைந்து விட்டது,