கெங்கவல்லி, ஜூன் 4: வீரகனூர்-ஆத்தூர் நெடுஞ்சாலையில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை சரி செய்ய பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். வீரகனூர் பேரூராட்சியில் 7வது வார்டு, ஆத்தூர் மெயின் ரோட்டில் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை தோறும் காய்கறி சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தை மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை தொடரும். பொதுவாக மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஆத்தூர் -வீரகனூர் நெடுஞ்சாலை என்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் ஒதுங்கக் கூட இடமில்லாத அவல நிலை ஏற்படுகிறது. போக்குவரத்தை சீர் செய்ய போலீசார் இருப்பதில்லை.