பழங்குடியின மாணவர்கள் விடுதிகளில் சேர அழைப்பு

நாமக்கல், ஜூன் 4: நடப்பு கல்வியாண்டில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் விடுதியில் சேர மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பழங்குடியினர் விடுதியில் சேருவதற்கான விண்ணப்ப படிவம், தொடர்புடைய விடுதி காப்பாளர் காப்பாளியினிடம் இலவசமாக பெற்று இரு புகைப்படம், வங்கி கணக்கு விபரம் ஆதார் நகல், பயிலும் பள்ளி மற்றும் தலைவரின் ஒப்புதல் பெற்று விண்ணப்ப படிவங்களில் கையொப்பமிட்டு வரும் 17ம் தேதிக்குள் தொடர்புடைய விடுதி காப்பாளர் மற்றும் காப்பாளினிகளிடம் நேரில் ஒப்படைக்க வேண்டும். விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு விடுதியிலும் 5 இடங்கள் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: