உசிலம்பட்டி, ஜூன் 4: பேரையூ ர்தாலுகா, சேடபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது மள்ளப்புரம். ஆழ்துளை போர்வெல் மூலம் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் தண்ணீர் நிரப்பி இப்பகுதிக்கு சப்ளை செய்யப்பட்டு வந்தது. கடந்த 5மாதங்களாக நிலத்தடிநீர் மட்டம் குறைந்து மேற்குத்தெரு மற்றும் கிணத்தாங்கரை தெரு பகுதிகளில் பொதுமக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யவில்லை. இதனால் இந்த பகுதிகளிலுள்ள பொதுமக்கள் மள்ளப்புரம் விலக்கு, புதூர், மீனாட்சி மூப்பன்பட்டி, ஆகிய பகுதிகளுக்கு சென்று டூவீலர், சைக்கிள்கள், தள்ளுவண்டிகள் மூலம் தண்ணீர் எடுத்து வந்தனர். குடிநீர் பிரச்னை சம்பந்தமாக பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியும், சேடபட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் கடந்த ஒருமாதத்திற்கு முன்பு புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.