மதுரை, ஜூன் 4: மதுரை வண்டியூர் மற்றும் இலந்தைக்குளம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடக்கவிருப்பதால், கீழ்கண்ட ஊர்களில் இன்று (ஜூன் 4) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடை செய்யப்படும் என கோ.புதூர் மின்வாரிய செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார். மின்தடை பகுதிகள்: வண்டியூர், பி.கே.எம். நகர், மானகிரி, சௌராஷ்ட்ராபுரம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், கருப்பாயூரணி, காளிகாப்பான், சீமான் நகர், பாண்டியன் கோட்டை, பாண்டிகோயில், மஸ்தான்பட்டி, கிழக்கு அண்ணாநகர், வீரபாஞ்சான், பூலான்குளம், அண்டார் கொட்டாரம், ஒத்தவீடு, இளமனூர், புதூர், எல்.கே.டி.நகர், கல்மேடு.