நாகர்கோவில் - கோட்டயம் பயணிகள் ரயில் மீது கல்வீச்சு

நாகர்கோவில், மே 30: நாகர்கோவில் - கோட்டயம் பயணிகள் ரயிலில் நடத்தப்பட்ட கல்வீச்சில் லோகோ பைலட்டுக்கு காயம் ஏற்பட்டது. நாகர்கோவில் - கோட்டயம் பயணிகள் ரயில் எண் 56304 நேற்று முன்தினம் கோட்டயம் செல்லும் வழியில் மாலை 4 மணியளவில் நேமம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட பின்னர் புறப்பட்டது. அப்போது ரயிலில் யாரோ கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் உதவி லோகோ பைலட் சுபாஷ் என்பவர் படுகாயம் அடைந்தார்.

பின்னர் அவர் திருவனந்தபுரம் ரயில்வே மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் ரயில் பயணத்தை தொடர்ந்தார். ரயில் மீது கல் வீசியவர் தொடர்பாக ரயில்வே போலீஸ் எஸ்ஐ சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: