காரைக்கால், மே 30: காரைக்கால் சேத்தூர் கிராமத்தில், சைல்டு லைன் அமைப்பு சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.காரைக்கால் மாவட்ட சைல்டு லைன் அமைப்பு சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருநள்ளாறு கொம்யூன், சேத்தூர் கிராமத்தில் நடத்தப்பட்டது. திருநள்ளாறு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, குழந்தைகள் காணாமல் போவதற்கான காரணம், அதனை தடுக்கும் முறை, பாதுகாப்பு முறைகள் குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.காரைக்கால் சைல்டு லைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் விமலா கலந்துகொண்டு, குழந்தைகள் பாதுகாப்புக்கு பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டிய முறைகள் குறித்தும், குழந்தைகள் ஒவ்வொருவரும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டியது குறித்தும் விளக்கினார்.