கரூர், மே 30: கரூர் திண்டுக்கல் சாலை கல்லுமடை பஸ் ஸ்டாப் அருகே பொதுமக்கள் நலன் கருதி நிழற்குடை அமைக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.கரூர் திண்டுக்கல் சாலையில் தாந்தோணிமலை பகுதியை தாண்டியதும் கல்லுமடை பகுதி உள்ளது. இந்த பகுதியை சுற்றிலும் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வெள்ளியணை, பாளையம், குஜிலியம்பாறை, திண்டுக்கல், மணப்பாறை, உப்பிடமங்கலம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு கல்லுமடை பஸ் நிறுத்தம் அருகே நின்று பஸ் ஏறிச் சென்று வருகின்றனர்.