கூடலூர் பந்தலூர் தாலுகாவில் பழங்குடியின மாணவர்களுக்கு இலவச கல்வி உபகரணம்

கூடலூர், மே 30:  பழங்குடியின பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு புத்தகப்பை, பேனா, பென்சில், நோட்டு, கிரையான்ஸ் போன்ற கல்வி உபகரணங்கள் வழங்கும் முகாம் கூடலூரை அடுத்த ஏழு முறம், கோடமூலா, தேவாலா, நாயக்கன்பாடி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இந்த முகாமை சென்னை ஏபிஆர்., பவுண்டேசன்  மற்றும் கூடலூர்  டிரீம்ஸ் இந்தியா கல்வி மற்றும் சமுக நல அறக்கட்டளை இணைந்து நடத்தினர். இதில் ராசி ரவிக்குமார், சைனி, செந்தமிழ்செல்வி போன்றோர் கலந்துகொண்டனர்.

Related Stories: