கறம்பக்குடி, மே 29: கறம்பக்குடி அருகே முட்டை ஏற்றி வந்த லாரி கழிழ்ந்து 5 பேர் படுகாயம் அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பகுடிக்கு 2 நாட்களுக்கு ஒருமுறை முட்டை ஏற்றிய லோடு ஆட்டோ வருவது வழக்கம். அதன்படி நேற்று காலை புதுக்கோட்டையில் இருந்து கறம்பக்குடியை நோக்கி முட்டைகள் ஏற்றிய லோடு ஆட்டோ கறம்பக்குடி நோக்கி வந்தது. துவார் அருகே ஆண்டிகுலப்பன்பட்டி என்ற இடத்தில் வந்தபோது திடீரென முட்டை லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற சாலை ஓரத்தில் இருந்த வயலுக்குள் கவிழ்ந்தது.