கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் கசியும் தண்ணீரால் நோய் பரவும் அபாயம் தா.பழூர், மே 29: அரியலூர் மாவட்டம் தா.பழூரிலிருந்து காரைக்குறிச்சி செல்லும் சாலையில் அமைந்துள்ள செல்லியம்மன் கோயில் அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட நீர் கசிவால் வீணாகும் குடிநீர்.
தா.பழூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையின் ஓரத்தில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட காற்று வெளியேறுவதற்கு அமைக்கப்பட்ட குழாயில் இருந்து தொடர்ந்து 2 வாரங்களுக்கு மேலாக தண்ணீர் வெளியேறி வருகிறது. அதனால் அந்த குழாயை சுற்றி அமைக்கப்பட்ட கட்டையில் உள்ள நீரில் அருகில் உள்ள பொதுமக்கள் மற்றும் சாலையில் கடந்து செல்பவர் என அனைவரும் குளிப்பது, துணி துவைப்பது கை, கால்கள் கழுவுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.