புளி உலுக்கியபோது ஏணியில் இருந்து விழுந்து மூதாட்டி பலி

ஜெயங்கொண்டம், மே 28: ஜெயங்கொண்டம் அருகே ஏணியில் ஏறி புளிய மரத்தில் புளியம்பழம் உலுக்கிய மூதாட்டி மரத்திலிருந்து தவறி விழுந்து பலியானார். ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாணத்திரையான்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி சின்னபொண்ணு(60). இவர் நேற்றுமுன்தினம் அவரது வீட்டின் பின்புறம் உள்ள புளியமரத்தில் ஏணி வைத்து ஏறி புளியம்பழம் உலுக்கி கெனாண்டிருந்தார். அப்போது கால் தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த சின்னபொண்ணு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரனை செய்து வருகின்றனர்.

Related Stories: