ஜெயங்கொண்டத்தில் மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.75 ஆயிரம் பணம் கொள்ளை

ஜெயங்கொண்டம், மே28: ஜெயங்கொண்டத்தில் மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.75 ஆயிரத்தை கொள்ளையடித்த  மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன்(45). இவர் ஜெயங்கொண்டம் வேலாயுதநகர் எட்டாவது கிராசியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம்  இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு கடைக்கு பின்பக்கம் உள்ள வீட்டிற்கு சென்று விட்டார். வழக்கம் போல்  தங்கி காலை வந்து பார்க்கும்போது கடையின் கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டு கல்லா பெட்டியில் இருந்த ரூ.75 ஆயிரத்தை   மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: