காவேரிப்பாக்கம், மே 28: காவேரிப்பாக்கம் பகுதியில் குளங்கள், குட்டைகள் நீரின்றி வற்றிவிட்டதால் குடிநீரை தேடி பொதுமக்கள் விவசாய நிலங்களுக்கு படையெடுக்கும் அவல நிலை உள்ளது.வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், சேரி ஊராட்சிக்கு உட்பட்டது உப்பரந்தாங்கல் கிராமம். இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் வசிப்போர் பெரும்பாலானோர் விவசாயிகள்.இங்கு பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம், உள்ளிட்டவைகள் உள்ளன. இந்நிலையில், தற்போது கோடை வெயிலில் குளங்கள், குட்டைகள் வற்றிவிட்டதால், ஆடு, மாடுகளுக்கும் கூட தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர்.