தா.பழூர், மே25 : விக்கிரமங்கலம் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் மக்கள் எதிர்பார்த்துள்ளனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட விக்கிரமங்கலம் அருகே உள்ளது அரசநிலையிட்டபுரம் கிராமம். இந்த கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் அரசநிலையிட்டபுரம் கிராமத்திற்கு க்கிரமங்கலத்திலிருந்து 2கிமீ தூரம் செல்ல வேண்டி உள்ளது. இங்கு வசிக்கும் குடும்பத்தினர் அத்தியாவசியமான தேவை அனைத்துக்கும் தினந்தோறும் விக்கிரமங்கலம் வந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் அங்குள்ள மக்கள் புதிய சாலை அமைத்து தர மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் 2017-2018ம் ஆண்டில் ரூ.59 லட்சம் மதிப்பீட்டு செலவில் புதிய சாலை அப்பகுதி மக்களுக்கு அமைத்து தரப்பட்டது.