அழகர்கோவில், மே 25: அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலின் உண்டியல் திறப்பு அங்குள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் வைத்து திறந்து எண்ணப்பட்டன. இதில் ரூ.22 லட்சத்து 53 ஆயிரத்து 321ம், தங்கம் 33 கிராமும், வெள்ளி 99 கிராமும், வெளிநாட்டு டாலர் நோட்டுகளும் இருந்தன. இதேபோல் இக்கோயிலின் உபகோயிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.