நூதனமுறையில் மணல் கடத்திய 10 பேர் மீது வழக்கு

நெல்லிக்குப்பம், மே 25: நெல்லிக்குப்பம் அருகே விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ள தென் பெண்ணை ஆற்றின் கரையோரம் கஸ்டம்ஸ் சாலையில் நெல்லிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பைக்குகளை போலீசார் நிறுத்தி சோதனை செய்ததில் பெண்ணையாற்றில் இருந்து சாக்கு மூட்டைகளில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் பி.என் பாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்தன்(47), விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்த வினோத்குமார்(23), இளவரசன்(24), செந்தில்(19), யுவராஜ், மகேந்திரன், சிவா, லோகநாதன், நாராயணன், பிரகாஷ் என தெரியவந்தது. மணல் கடத்திய 10 பேர் மீது நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சாக்கு மூட்டைகளில் மணல் கடத்திய 10 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: