புதுக்கோட்டை, மே 24: புதுக்கோட்டை புதிய பஸ்நிலையத்தில் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் தொடங்கப்பட்ட காவல் உதவி மையம் பூட்டிக்கிடப்பதால் அதனை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை நகரின் மையப் பகுதியில் புதிய பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து அறந்தாங்கி, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, சென்னை, கோவை, ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில் தினமும் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்திற்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.